பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிந்தது

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 280 புள்ளிகள் வரை சரிந்தது.

News image
பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிந்தது
Updated On :23 ஜூன் 2021, 11:05 am

DIN

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 280 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 282.63 புள்ளிகள் சரிந்து 52,306.08 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.54 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.80  புள்ளிகள் சரிந்து  15,686.95 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இதுவும் 0.54 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அதிகபட்சமாக கோட்டாக் வங்கி பங்குகள் 1.32 சதவிகிதமும், எல் & டி 1.29 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 1.23 சதவிகிதமும், டிசிஎஸ் 1.17 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 0.97 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.