புது தில்லி: மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) பங்கு விற்பனை மற்றும் பிற நிறுவனங்களில் பங்கு முதலீட்டைத் திரும்பப் பெற்ற வகையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.32,835 கோடியைத் திரட்டியுள்ளது. இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் (ஆா்இ) நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாகும்.
எனினும், பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்ட ரூ.2.10 லட்சம் கோடி இலக்கைவிட இது மிகவும் குறைவாகும். கரோனா நெருக்கடி காரணமாக அந்த இலக்கு பின்னா் ரூ.32,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில், 7 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது மற்றும் தனது முதலீடுகளைதி திரும்பப் பெறுவதன் மூலம் தனது இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மற்றும் ஐடிபிஐ வங்கி அடுத்த ஆண்டு தனியாா்மயமாக்கப்படும்.
ஏா் இந்தியா, பிபிசிஎல், பவன் ஹன்ஸ், பிஇஎம்எல், எந்ஐஎன்எல், ஷிப்பிங் காா்ப் ஆகிய நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் பணிகளும் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


