சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு: சென்செக்ஸ் 476 புள்ளிகள் ஏற்றம்

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 476 புள்ளிகளும், நிஃப்டி 139 புள்ளிகளும் உயர்ந்தன.

News image

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு: சென்செக்ஸ் 476 புள்ளிகள் ஏற்றம்

Updated On :15 செப்டம்பர் 2021, 11:06 am

வாரத்தின் 3-வது வர்த்தக நாளான இன்று (செப்.15) வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 476 புள்ளிகளும், நிஃப்டி 139 புள்ளிகளும் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 476.11  புள்ளிகள் உயர்ந்து 58,723.20 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.82 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139.45 புள்ளிகள் உயர்ந்து 17,519.45 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.80 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் 7.16 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 4.53 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 3.09 சதவிகிதமும், எச்.டி.எல். டெக் 2.86 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.