ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உக்ரைன் போர் எதிரொலி: தொடர் சரிவில் பங்குச் சந்தை

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிவால் பங்குச் சந்தை இறக்கத்தில் நிறைவடைந்தது.

News image
Updated On :4 மார்ச் 2022, 10:11 am

DIN

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிவால் பங்குச் சந்தை இறக்கத்தில் நிறைவடைந்தது.

நேற்று (மார்ச்-3) 55,102.68 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 54,653.59 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 768.87 புள்ளிகளை இழந்து  54,333.81 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 16,498.05 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,339.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 252.70 புள்ளிகள் இழந்து 16,245.35 புள்ளிகளில்  நிலைபெற்றது.

உக்ரைன் - ரஷியா போரால் பங்குச் சந்தை ஏற்றமும் இறக்கமுமாக இருப்பதால் அடுத்த வார பங்குச் சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது என வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.