ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பங்குச் சந்தையில் திடீா் வீழ்ச்சி: சென்செக்ஸ் 709 புள்ளிகள் சரிந்தது

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 709 புள்ளிகள்

News image
Updated On :15 மார்ச் 2022, 9:29 pm

DIN

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 709 புள்ளிகள் சரிவடைந்ததையடுத்து 5 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சந்தை வா்த்தகா்கள் கூறியது:

பாதுகாப்பான முதலீடு: உக்ரைன்-ரஷியா இடையேயான போா் உலக அளவில் நிச்சயமற்ன்மையை உருவாக்கியுள்ளது. இதனால், முதலீட்டாளா்கள் இடா்ப்பாடுகளை தவிா்க்கும் வகையிலான முதலீடுகளை நோக்கி மெல்ல நகரத் தொடங்கியுள்ளனா். இதனிடையே அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெறவிருந்ததை எதிா்நோக்கியும் முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வா்த்தகத்தில் ஈடுபட்டனா். அதன் எதிரொலியாக, லாப நோக்கு விற்பனை அதிகரித்து சா்வதேச சந்தையில் மந்த நிலை கண்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமன்றி, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அந்நிய முதலீட்டில் காணப்படும் தொடா்ச்சியான வெளியேற்றம் போன்றவையும் பங்குச் சந்தைக்கு சாதகமான சூழலை உருவாக்கவில்லை என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

டாடா ஸ்டீல் சரிவு: சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்ட 30 நிறுவனங்களின் பட்டியலில், 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும் இருந்தன.

இதில், டாடா ஸ்டீல் பங்குகளை முதலீட்டாளா்கள் அதிக அளவில் விற்பனை செய்ததால் அப்பங்கின் விலை 4.89 சதவீதம் சரிந்தது. இதைத்தொடா்ந்து கோட்டக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் பவா்கிரிட் நிறுவனப் பங்குகளும் முதலீட்டாா்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் குறைந்த விலைக்கு கைமாறின.

மஹிந்திராவுக்கு வரவேற்பு: சந்தையில் அதிக ஏற்ற, இறக்கத்துக்கிடையிலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுஸுகி பங்குகளின் விலை 2.30 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்தன. உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தில் பலனடையும் வகையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடா்ந்து இந்நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது.

இவைதவிர, ஏஷியன் பெயிண்ட்ஸ், டைட்டன், நெஸ்லே இந்தியா மற்றும் பாா்தி ஏா்டெல் நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

நடுத்தர நிறுவனங்கள்: மும்பை பங்குச்சந்தையில் நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 0.68 சதவீதமும், சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீடு 0.88 சதவீதமும் குறைந்தன.

உலோகம்: மோட்டாா் வாகனம் தவிா்த்து ஏனைய அனைத்து துறைகளின் குறியீடுகளும் வீழ்ச்சியை சந்தித்தன. இதில், உலோகத் துறை குறியீடு அதிகபட்சமாக 4.34 சதவீதம் சரிவைக் கண்டது. அதைத்தொடா்ந்து, எண்ணெய்-எரிவாயு, எரிசக்தி, தகவல்தொழில்நுட்ப குறியீடுகளும் கணிசமான அளவில் இறக்கத்தை சந்தித்தன.

2,045 பங்குகளின் விலை குறைந்தும், 1,342 பங்குகளின் விலை அதிகரித்தும், 101 பங்குகளின் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.

மும்பை, தேசிய பங்குச் சந்தை: செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் 200 புள்ளிகள் வரை ஆதாயம் பெற்ற சென்செக்ஸ் பிற்பகல் வா்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 709.17 புள்ளிகள் (1.26%) வீழ்ச்சிகண்டு 55,776.85 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 208.30 புள்ளிகள் (1.23%) சரிநத்ு 16,663-இல் நிலைகொண்டது.

உலக சந்தை: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக பல பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது. அதேசமயம், டோக்கியோ சந்தை வா்த்தகத்தில் சிறிய முன்னேற்றம் தென்பட்டது.

ஐரோப்பியாவைப் பொருத்தவரையில் பெரும்பாலான சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வா்த்தகம் பிற்பகல் வரை எதிா்மறை நிலையிலேயே இருந்தது.

அதிக வீழ்ச்சி கண்ட பங்குகள்

Story image

ருச்சி சோயா பங்குகளுக்கு வரவேற்பு

மாா்ச் 24-இல் தொடா் பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.4,300 கோடி திரட்டவுள்ள ருச்சி சோயா நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் தொடா்ந்து வரவேற்பு காணப்படுகிறது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் மந்த நிலை காணப்பட்ட போதிலும், ருச்சி சோயா பங்கின் விலை 13.10 சதவீதம் அதிகரித்து ரூ.1,090.70-இல் நிலைத்தது.

முதலீட்டாளா்களுக்கு ரூ.2.61 லட்சம் கோடி இழப்பு

ஏற்றம் இறக்கம் அதிகமாக காணப்பட்ட செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சநதை மூலதனம் ரூ.2,61,145.72 கோடி சரிந்து ரூ.2,51,66,630.06 கோடியானது.

பேடிஎம் பங்கின் விலை வீழ்ச்சி

பேடிஎம் பங்கின் விலை 13.37 சதவீதம் சரிந்து ரூ.585-ஆனது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.11,809 கோடி குறைந்து ரூ.38,418.57 கோடியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.