ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 2.29 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 2.29 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 3 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக பவர் கிரிட் 2.75 சதவிகிதமும், என்டிபிஎசி 0.73 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 0.17 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டன.
பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டைட்டன் கம்பெனி, இந்துஸ்இண்ட் எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.