நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரெப்போ வட்டியில் மாற்றம்: சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிவு

ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன. 

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2022, 7:22 pm IST

ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 2.29 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 2.29 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 3 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக பவர் கிரிட் 2.75 சதவிகிதமும், என்டிபிஎசி 0.73 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 0.17 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டன. 

பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டைட்டன் கம்பெனி, இந்துஸ்இண்ட் எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.