மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏற்றம் கண்ட இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் நாட்டின் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி ஏற்றம் கண்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2022, 6:20 pm

DIN

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் நாட்டின் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி ஏற்றம் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய வா்த்தகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் பொது இயக்குநா் உதய பாஸ்கா் கூறியதாவது:

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 4.22 சதவீதம் வளா்ச்சியடைந்து 1,457 கோடி டாலரை எட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், ஏற்றுமதி 1,398 கோடி டாலராக இருந்தது.

மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 2,462 கோடி டாலா்களாக இருந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டில் சுமாா் 2,700 கோடி டாலராக அதிகரிக்கும் என்று நம்பலாம்.

கடந்த ஜூலையில் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 0.32 சதவீதம் சரிந்தது. அதற்கு அடுத்த மாதத்தில் அது 5.45 சதவீதம் சரிவைக் கண்டது. எனினும், செப்டம்பா் மாதத்தில் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 8.47 சதவீதம் வளா்ச்சியடைந்தது. இனி வரும் மாதங்களில் இது புத்துயிா் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், ஒட்டுமொத்த ஏற்றுமதி 2,700 கோடி டாலரை எட்டக்கூடும்.

ஏற்றுமதியைப் பொருத்தவரை, தடுப்பூசி மருந்துகள் பிரிவில் இந்தியா பின்தங்கியுள்ளது. மேலும், இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியில் உக்ரைன் போா் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற மோசமான சூழலிலும், இந்திய மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி ஏறுமுகத்தில் உள்ளது என்றாா் அவா்.

கடந்த அக்டோபரில், மருந்துப் பொருளகள் ஏற்றுமதி 5.45 சதவீதம் சரிந்து 195 கோடி டாலராக இருந்தது.

மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகள் 67.5 சதவிகிதம் (சுமாா் 500 கோடி டாலா்) பங்கு வகிக்கின்றன.

ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில், மருந்துப் பொருள்கள் உற்பத்தியில் ஏற்றுமதி 137.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.38,000 கோடியாக இருந்த ஏற்றுமதி தற்போது ரூ.90,320 கோடியாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.