மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

என்டிபிசி: 2-ம் காலாண்டின் நிகர மதிப்பு 7 சதவிகிதமாகக் குறைவு

என்டிபிசி நிறுவனத்தில் இரண்டாம் காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 7 சதவீதம் சரிந்து ரூ.3,417.67 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 9:07 pm IST

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தினுடைய ஒருங்கிணைந்த நிகர லாபம் 7 சதவிகிதம் சரிந்து ரூ. 3,417.67 கோடியாக உள்ளதாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

இதுவே கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 3,690.95 கோடியாக இருந்ததாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த வருவாய் ரூ.33,095.67 கோடியிலிருந்து ரூ. 44,681.50 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, மொத்த செலவுகள் ரூ. 28,949.53 கோடியிலிருந்து ரூ. 40,000.99 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் நிறுவனத்தின் சராசரி மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒன்றுக்கு ரூ.4.77 ஆக இருந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் யூனிட்டுக்கு ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ. 3.86 ஆக இருந்தது.

நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களின் பயன்பாடு இரண்டாம் காலாண்டில் 69.29 சதவிகிதத்திலிருந்து 74.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விநியோகம் 0.42 எம்எம்டியிலிருந்து 5.58 எம்எம்டி ஆக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு நிலக்கரி விநியோகம் 44.83 எம்எம்டியிலிருந்து 48.72 எம்எம்டி ஆக அதிகரித்துள்ளது என என்டிபிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.