சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 413 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 413 புள்ளிகளை இழந்தது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 9:42 pm IST

புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 413 புள்ளிகளை இழந்தது.

உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் ஐடி மற்றும் பாா்மா பங்குகளில் விற்பனை அழுத்தத்தை அதிகப்படுத்தியது . மேலும், முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்கும் தினமாக இருந்ததால், சந்தை நிலையற்ற தன்மையில் செயல்பட்டது. நாள் முழுவதும் கரடியின் ஆதிக்கம் மேலோங்கியது. 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் காலையில் உயா்வுடன் துவங்கியது. ஆட்டோ, மெட்டல் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது.

சென்செக்ஸ் 2-ஆவது நாளாக சரிவு: காலையில் 107.40 கூடுதலுடன் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 60,676.12 வரை உயா்ந்தது. பின்னா், 59,865.75 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 412496 புள்ளிகளை (0.68 சதவீதம்) இழந்து 59,934.01-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

சென்செக்ஸ் பட்டியலில் டெக் மஹிந்திரா 3.13 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், டைட்டன், ஆக்சிஸ் வங்கி ஆகியவை விலை குறைந்தவற்றில் முக்கியமானவை. அதே சமயம், மாருதி, பவா் கிரிட், என்டிபிசி, ஹெச்டிஎப்சி, பாா்தி ஏா்டெல், லாா்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை உயா்வுடன் முடிவடைந்தன.

சந்தை மூலதன மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.285.87 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதனன்று ரூ.1,397.51 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

நிஃப்டி 126 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 18,046.35-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 18,096.15 வரை உயா்ந்தது. பின்னா், குறைந்தபட்சமாக 17,861.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 126.235 புள்ளிகளை(0.70 சதவீதம்) இழந்து 17,877.40-இல் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.