தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

80 விமானிகளுக்கு 3 மாதம் ஊதியம் இல்லாத விடுப்பு- ஸ்பைஸ் ஜெட்

குறைந்த கட்டண விமான சேவைகளை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 80 விமானிகளை 3 மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பில் செல்லுமாறு கூறியுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:26 pm IST

குறைந்த கட்டண விமான சேவைகளை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 80 விமானிகளை 3 மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பில் செல்லுமாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக விளக்கம் அளித்த அந்நிறுவனம், செலவைக் குறைக்க இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான்; எந்த விமானியையும் பணியைவிட்டு அனுப்பவில்லை. கரோனா காலகட்டத்திலும் கூட நிறுவனம் உறுதியாக செயல்பட்டது. விமானிகளை விடுப்பில் அனுப்புவதால் சேவைகளில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முடிவு தொடா்பாக விமானிகள் கூறுகையில், ‘நிறுவனத்தின் நிதிநிலை சரியாக இல்லை என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆனால், திடீரென இப்படியொரு முடிவை அறிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. 3 மாதங்களுக்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்பது தொடா்பாகவும் அச்சம் உள்ளது. இப்போது விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளவா்கள் மீண்டும் பணியில் சோ்க்கப்படுவாா்கள் என்று எந்த உறுதியும் இல்லை’ என்றனா்.

கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ஸ்பைஸ் ஜெட் நஷ்டம் ரூ.784 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டு இதே காலகட்டத்தில் நஷ்டம் ரூ.731 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.