5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றிய மைக்ரோசாஃப்ட்! சக போட்டியாளருக்கு உதவி!!

ஆப்பிள் நிறுவனம் கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருந்தபோது மைக்ரோசாஃப் நிறுவனம் செய்த முதலீடு ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றியுள்ளது. 

News image

மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் / ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:36 pm IST


ஆப்பிள் நிறுவனம் கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருந்தபோது மைக்ரோசாஃப் நிறுவனம் செய்த முதலீடு ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றியுள்ளது. 

1997ஆம் ஆண்டு இதே நாளில் (ஆக. 7) மைக்ரோசாஃப் நிறுவனம் சுமார் 150 மில்லியன் டாலரை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் வங்கிக்கடனில் மூழ்காமல் ஆப்பிள் நிறுவனம் தப்பித்தது.

சக போட்டியாளரான ஸ்டீவ் ஜாப்ஸ்ஸின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்து உதவியதன் மூலம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்த முதலீட்டின் மூலம் தொழிலில் புதிய வாய்ப்புகளும் உருவானதாக கடந்த 2007ஆம் ஆண்டு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். 

பில் கேட்ஸின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்த ஸ்டீவ் ஜாப்ஸ், நன்றி பில், உலகின் மிகச்சிறந்த இடம் என்று அவரின் இதயத்தைக் குறிப்பிடும்படி தெரிவித்துள்ளார். 

அதோடு மட்டுமல்லாமல், தனது ஆப்ரேட்டிங் சிஸ்டம் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது ஆப்பிள் தொடுத்திருந்த வழக்கையும் திரும்பப் பெறுவதாக ஆப்பிள் அறிவித்தது. 

இதன்மூலம், ஆப்பிள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடையே புதிய தொழில்முறை வாய்ப்புகளும் ஏற்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.