12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரூ.2,673 கோடிக்கு ஆர்டர் பெற்ற பெல் நிறுவனம்!

பெல் நிறுவனமானது கோவா ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் ஆகியவற்றிடமிருந்து ரூ.2,673 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

Published On :

புதுதில்லி:  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனமானது கோவா ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் ஆகியவற்றிடமிருந்து ரூ.2,673 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 14 வகையான சென்சார்களை வழங்குவதற்காக கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.1,701 கோடி அளவு ஆர்டரும் அதே வேளையில் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.972 கோடி ஆர்டரும், ஆக மொத்தம் ரூ.2,673 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெல் நிறுவனம் பெற்றுள்ளது.

டிசம்பர் 15, 2023 அன்று ரூ.86.15 கோடி மதிப்புள்ள கூடுதல் ஆர்டர்களைப் பெற்றுள்ளது பெல் நிறுவனம். இதின் மூலம் பல்வேறு உதிரி பாகங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆர்டர்கள் தன் கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில், பெல் நிறுவனமானது 25 ஆயிரத்து 935.15 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.