அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13% உயர்வு
அதானி குழுமத்தின் பங்குகள் புதன்கிழமை காலை வணிகத்தின்போது உயர்வுடன் தொடங்கின. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13 சதவிகித விலை உயர்வை கண்டன.


புது தில்லி: அதானி குழுமத்தின் பங்குகள் புதன்கிழமை காலை வணிகத்தின்போது உயர்வுடன் தொடங்கின. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13 சதவிகித விலை உயர்வை கண்டன.
அதானி குழுமத்துக்குச் சொந்தமான எட்டு நிறுவனப் பங்குகள் உயர்வை கண்டன. இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சிவப்பு அம்புக்குறியைக் கொண்டிருந்தன.
இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி
மும்பை பங்குச் சந்தையில் இன்று அதானி என்டர்பிரைசஸ் 13.07 சதவிகித உயர்வைக் கண்டு ரூ.2,038க்கு வணிகமானது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.32 லட்சம் கோடியாக உயர்ந்தது.
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 7.24 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.593.35 ஆக உயர்ந்தது. இதனால் சந்தை மதிப்பும் ரூ.1.28 லட்சம் கோடியானது.
அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,314 ஆகவும், அதானி பவர் 4.99 சதவிகிதம் உயர்ந்து ரூ.182 ஆகவும் அதானி வில்மர் பங்கு 4.99 சதவிகிதம் உயர்ந்து ரூ.419.35 ஆகவும் இருந்தது.
என்டிடிவி, அம்புஜா சிமெண்ட், ஏசிசி நிறுவனப் பங்குகளும் இன்று ஏற்றத்தைக் கண்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...