ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!
பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
நேற்று(புதன்கிழமை) 65,446 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 234.93 புள்ளிகள் அதிகரித்து 65,680.97 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 64.75 புள்ளிகள் உயர்ந்து 19,463.25 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ரிலையன்ஸ், எம் & எம், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ஹின்டால்கோ, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை இறக்கம் கண்டு வருகிறது.
தொடர்ந்து, சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,000 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகமாகி சாதனை படைத்து வருகிறது.
இதையும் படிக்க | இதற்கு பெயர்தான் வளர்ச்சியா? - மோடிக்கு பிரசாந்த் பூஷண் கேள்வி