புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்செக்ஸ் 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 66,000 புள்ளிகளைக் கடந்து இன்று புதிய உச்சத்தை எட்டியது.

News image
Updated On :13 ஜூலை 2023, 10:41 am

DIN

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 66,000 புள்ளிகளைக் கடந்து இன்று புதிய உச்சத்தை எட்டியது.

நேற்று(புதன்கிழமை) 65,393.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. 

பங்குச்சந்தை நேர முடிவில் சென்செக்ஸ் 164.99 புள்ளிகள் அதிகரித்து 65,558.89 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 29.45 புள்ளிகள் உயர்ந்து 19,463.25 புள்ளிகளில் வர்த்தகமானது. 

டாடா ஸ்டீல், டிசிஎஸ், மஹிந்திரா & மஹிந்திரா, இன்போசிஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், கோடக் மஹிந்திரா பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. 

பவர் கிரிட், யுபிஎல், கோல் இந்தியா, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. 

பங்குச்சந்தை உச்சம்: 

முன்னதாக, காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. 66,049.64 என்ற புள்ளிகளில் இருந்தது. அதேநேரத்தில் நிஃப்டி 19562.20 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.