கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 800 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. 

News image
Updated On :20 செப்டம்பர் 2023, 12:21 pm

DIN

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 800 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. 

பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) காலை தொடங்கியது முதலே இறக்கத்தைச் சந்தித்தன. 

செவ்வாய்க்கிழமை 67,596.84 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 67,080.18 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 796 புள்ளிகள் குறைந்து 66,800.84 புள்ளிகளில் நிறைவுற்றது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 231.90 புள்ளிகள் குறைந்து 19,901.40 புள்ளிகளில் முடிந்தது. 

பவர் கிரிட், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன.

ஹெச்டிஎப்சி பேங்க், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ரிலையன்ஸ், பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.