மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 800 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.
பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) காலை தொடங்கியது முதலே இறக்கத்தைச் சந்தித்தன.
செவ்வாய்க்கிழமை 67,596.84 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 67,080.18 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 796 புள்ளிகள் குறைந்து 66,800.84 புள்ளிகளில் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 231.90 புள்ளிகள் குறைந்து 19,901.40 புள்ளிகளில் முடிந்தது.
பவர் கிரிட், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன.
ஹெச்டிஎப்சி பேங்க், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ரிலையன்ஸ், பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.
இதையும் படிக்க | 1952 முதல் 2023 வரை நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு?