தவறான தகவல்: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்!

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தவறான தகவல்: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்!
Published on
Updated on
1 min read


மாஸ்கோ: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரஷியாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்பபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
        
2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப்  பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷியா முரண்பட்டுள்ளது

ரஷியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்துக்கு ரஷிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ரஷியா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. 

கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என ரஷியா விமர்சித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷிய அரசு குறிப்பிட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com