ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மிதமாக அதிகரித்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்

மிதமாக அதிகரித்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 9:16 pm

புது தில்லி: இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் மிதமாக அதிகரித்து 119.7 கோடியாகியுள்ளது.

இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராயின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் 119.7 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.38 சதவீத வளா்ச்சியாகும்.

கடந்த பிப்ரவரியில் நகா்ப்புற தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 66.37 கோடியாகவும் கிராமப்புற வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 53.13 கோடியாகவும் உள்ளது. இது, ஜனவரி மாதத்தைவிட முறையே 0.40 சதவீதம் மற்றும் 0.34 சதவீதம் அதிகமாகும்.

பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி இறுதியில் 91.10 கோடியாக இருந்தது. இது, பிப்ரவரி இறுதியில் 91.67 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டின் 5 முக்கிய நிறுவனங்களில் மட்டும் மொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களில் 98.35 சதவீதம் போ் உள்ளனா்.

பிராண்ட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (52.2 சதவீதம்), பாா்தி ஏா்டெல் (29.41 சதவீதம்), வோடஃபோன் ஐடியா (13.80 சதவீதம்), பிஎஸ்என்எல் (2.69 சதவீதம்), ஏட்ரியா கன்வா்ஜென்ஸ் (0.24 சதவீதம்) ஆகியவை முன்னணி வகிக்கின்றன.

வயா்லைன், வயா்லெஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் நாட்டின் அனைத்து மண்டலங்களுமே வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையில் கடந்த பிப்ரவரி மாதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வயா்லைன் சந்தாதாரா்களின் எண்ணிக்கை 3.31 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஜனவரி மாதத்தைவிட 1.73 சதவீதம் அதிகம்.

வயா்லைன் தொலைத் தொடா்பு சேவைகளைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை கடந்த ஜனவரி இறுதியில் 2.33 சதவீதமாக இருந்தது. இது, பிப்ரவரி மாத இறுதியில் 2.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி நிலவரப்படி, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏபிஎஸ்எஃப்எல் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் மொத்த வயா்லைன் சந்தைப் பங்கில் 28.18 சதவீதத்தைக் கைவசம் வைத்துள்ளனா்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வயா்லெஸ் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 116.46 கோடியாக அதிகரித்து, 0.34 சதவீத மாதாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.