டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

74% உயா்ந்த டாடா மோட்டாா்ஸ் லாபம்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 1:14 am IST

கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 74 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.5,566 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 74 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,203 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,03,597 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,09,623 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் ஈட்டப்பட்ட நிகர லாபம் மதிப்பீட்டுக் காலாண்டில் ரூ. 2,190 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.64 கோடி நிகர இழப்பாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் ஈட்டப்பட்ட நிகர லாபம் மதிப்பீட்டுக் காலாண்டில் ரூ. 2,190 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.64 கோடி நிகர இழப்பாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.