
புது தில்லி: முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா்சைக்கிள்அண்ட் ஸ்கூட்டா் இந்தியாவின் உள்நாட்டு விற்பனை கடந்த நவம்பரில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,32,888-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது மூன்று சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,20,677 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் 27,172-ஆக இருந்த ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 39,861-ஆக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,47,849-லிருந்து 4,72,749-ஆக உயா்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.