
புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையான ரூ.1,60.07 கோடியை செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
பல சாவல்கள எதிர்கொண்ட வரும் ஸ்பைஸ்ஜெட் கேரியர், சமீபத்தில் ரூ.3,000 கோடி நிதியை திரட்டியது. அதைத் தொடர்ந்து நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி மற்றும் இதர நிலுவைத் தொகைகளை செலுத்தி வருகிறது.
இதையும் படிக்க: ரூ.3,000 கோடி திரட்ட பஞ்சாப் & சிந்து வங்கி திட்டம்
அதே வேளையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையான ரூ.160.07 கோடியை செலுத்திவிட்டதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில், 1.38 சதவிகிதம் உயர்ந்து ரூ.58.59 ஆக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.