மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

25 சதவிகித பங்குடன் ஆப்பிள் இந்திய டேப்லெட் சந்தையில் முன்னிலை!

ஆப்பிள் முன்னணி வகிக்கும் இந்திய டேப்லெட் சந்தை: சாம்சங், லெனோவாவை முந்தியது

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 8:56 pm IST

புதுதில்லி: 2023 மற்றும் டிசம்பர் காலாண்டில், டேப்லெட் பிசி சந்தையில், ஆப்பிள் நிறுவனம் அதன் ஏற்றுமதியில் சரிவு கண்ட போதிலும், 25 சதவிகித பங்களிப்புடன் முன்னிலை வகித்தது.

2023ல் 23 சதவிகித சந்தைப் பங்குடன் சாம்சங் இரண்டாவது இடத்திலும், ஆப்பிள் டேப்லெட் 25 சதவிகித சந்தைப் பங்குடன் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து சாம்சங் 23 சதவிகிதத்தில் உள்ளது என்று சைபர்மீடியா ஆராய்ச்சி இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிள் டேப்லெட் பிசி ஏற்றுமதியானது ஆண்டுக்கு ஆண்டு 17 சதவிகிதம் என்ற அடிப்படையில் குறைந்துள்ளது.

லெனோவா டிசம்பர் காலாண்டில் 24 சதவிகித சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில் அதன் ஏற்றுமதி 3 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் சாம்சங் டேப்லெட் பிசி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

5ஜி டேப்லெட்டுகளுக்கான வலுவான தேவையால் உந்தப்பட்டதால் 2023ஆம் ஆண்டு அதன் நான்காவது காலாண்டில் 21 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. அதே வேளையில் அதன் ஏற்றுமதி 43 சதவிகிதம் அதிகரித்தது.

இந்த நிலையிலும் வைஃபை டேப்லெட்டுகளும் சிறப்பாக செயல்பட்டன. இது 13 சதவிகிதம் அதிகரிப்பைப் பதிவு செய்து அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 52 சதவிகிதம் அதிகரித்தது. பிரீமியம் டேப்லெட் பிரிவில் ரூ.20,000 முதல் 30,000 வரையிலான டேப்லெட் 95 சதவிகிதம் சிறப்பாக விற்பனையானது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாறுபட்ட தயாரிப்பு சலுகைகள் மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் விருப்பங்கள் போன்ற காரணிகளால் டேப்லெட் சந்தை 2024ஆம் ஆண்டில் 5 முதல் 10 சதவிகித நிலையான வளர்ச்சிக்கு தயாராக இருந்தது என்று சைபர் மீடியா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுதில்லி: 2023 மற்றும் டிசம்பர் காலாண்டில், டேப்லெட் பிசி சந்தையில், ஆப்பிள் நிறுவனம் அதன் ஏற்றுமதியில் சரிவு கண்ட போதிலும், 25 சதவிகித பங்களிப்புடன் முன்னிலை வகித்தது.

2023ல் 23 சதவிகித சந்தைப் பங்குடன் சாம்சங் இரண்டாவது இடத்திலும், ஆப்பிள் டேப்லெட் 25 சதவிகித சந்தைப் பங்குடன் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து சாம்சங் 23 சதவிகிதத்தில் உள்ளது என்று சைபர்மீடியா ஆராய்ச்சி இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிள் டேப்லெட் பிசி ஏற்றுமதியானது ஆண்டுக்கு ஆண்டு 17 சதவிகிதம் என்ற அடிப்படையில் குறைந்துள்ளது.

லெனோவா டிசம்பர் காலாண்டில் 24 சதவிகித சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில் அதன் ஏற்றுமதி 3 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் சாம்சங் டேப்லெட் பிசி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

5ஜி டேப்லெட்டுகளுக்கான வலுவான தேவையால் உந்தப்பட்டதால் 2023ஆம் ஆண்டு அதன் நான்காவது காலாண்டில் 21 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. அதே வேளையில் அதன் ஏற்றுமதி 43 சதவிகிதம் அதிகரித்தது.

இந்த நிலையிலும் வைஃபை டேப்லெட்டுகளும் சிறப்பாக செயல்பட்டன. இது 13 சதவிகிதம் அதிகரிப்பைப் பதிவு செய்து அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 52 சதவிகிதம் அதிகரித்தது. பிரீமியம் டேப்லெட் பிரிவில் ரூ.20,000 முதல் 30,000 வரையிலான டேப்லெட் 95 சதவிகிதம் சிறப்பாக விற்பனையானது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாறுபட்ட தயாரிப்பு சலுகைகள் மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் விருப்பங்கள் போன்ற காரணிகளால் டேப்லெட் சந்தை 2024ஆம் ஆண்டில் 5 முதல் 10 சதவிகித நிலையான வளர்ச்சிக்கு தயாராக இருந்தது என்று சைபர் மீடியா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.