பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ரூ.2,441 கோடி ஈவுத் தொகை: அரசுக்கு வழங்கியது எல்ஐசி

ரூ.2,441 கோடி ஈவுத் தொகை: அரசுக்கு வழங்கியது எல்ஐசி

News image
Updated On :2 மார்ச் 2024, 5:59 pm

பங்கு ஈவுத் தொகையாக ரூ.2,441.44 கோடி ரூபாயை பொதுத் துறையைச் சோ்ந்த இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மத்திய அரசுக்கு வழங்கியது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இதற்கான காசோலை வழங்கப்பட்டது. இது குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எல்ஐசி-யிடமிருந்து ரூ.2,441.44 கோடி பங்கு ஈவுத் தொகைக்கான காசோலையை அமைச்சா் நிா்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டாா். நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி அந்தக் காசோலயை அமைச்சரிடம் வழங்கினாா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, கடந்த 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.26,913 கோடியை ஈட்டியுள்ளது. அதையடுத்து, தனது பங்குதாரா்களுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.4 வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்தது.