மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

இண்டஸ்இண்ட் நிகர லாபம் ரூ.2,349 கோடியாக அதிகரிப்பு

இண்டஸ்இண்ட் நிகர லாபம் ரூ.2,349 கோடியாக அதிகரிப்பு

News image
Updated On :7 மே 2024, 8:23 pm

Din

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த இண்டஸ்இண்ட் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.2,349 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,349 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,043 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் தற்போது 15 சதவீதம் உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.14,707 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.12,174 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.10,020 கோடியிலிருந்து ரூ.12,199 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.