தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

யுபிஐ மூலம் அதிகரிக்கும் செலவுகள்: ஆய்வு அலசல்

News image
யுபிஐ (மாதிரி படம்)- ஐஏஎன்எஸ்
Updated On :12 மே 2024, 10:21 am

DIN

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் யுபிஐ மூலமாக அதிகம் செலவளிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

நாள்தோறும் மேற்கொள்கிற பண பரிவர்த்தனைகள் தாண்டி வீட்டு உபயோக பொருள்கள், தொழில்நுட்ப சாதனங்கள், ஆடை அலங்கார பொருள்கள் உள்ளிட்டவற்றை மக்கள் யுபிஐ மூலமாக வாங்குகின்றனர்.

ஐஐடி தில்லி மேற்கொண்ட இந்த ஆய்வில், யுபிஐ மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வளர்ச்சிக்கு பிறகு ஏறத்தாழ 74 சதவிகிதம் மக்கள், தேவைக்கு அதிகமாக செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து, “பணத்தைக் காட்டிலும் கையாள எளிதாக உள்ள இந்த யுபிஐ வசதி, செலவளிப்பது குறித்த குறைவான அறிதலை ஏற்படுத்துகிறது. பணம் என்கிற உடைமை கையில் இல்லாததால் செலவுகளை கண்காணிக்க இயல்வதில்லை” என சந்தை வல்லுநர் பிரபு ராம் தெரிவித்துள்ளார்.

என்பிசிஐ, ஏப்ரல் மாதத்தில் யுபிஐ மூலம் 1,330 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அதிகமான எண்ணிக்கை இது. மேலும் சராசரியாக ஒரு பரிவர்த்தைக்கான செலவு (ஏடிஎஸ்) ரூ.1,648-ல் இருந்து ரூ.1,515 ஆக குறைந்துள்ளது.

யுபிஐ வந்த பிறகு கையில் காசு இருப்பதில்லை என்கிற நிலையைத் தாண்டி வங்கிக் கணக்கிலும் காசு இருக்க நாம் விடுவதில்லை என இந்த ஆய்வு சொல்லாமல் சொல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.