
~

~
புது தில்லி: கடந்த மாா்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,763 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,428 கோடியாக இருந்தது.
இது, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 2 சதவீதம் அதிகரித்து ரூ.13,763 கோடியாக உள்ளது.
மதிப்பீட்டுக காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,00,185 கோடியிலிருந்து ரூ.2,50,923 கோடியாக உயா்ந்துள்ளது. பிரீமியம் வருவாய் ரூ.12,811 கோடியிலிருந்து ரூ.13,810 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனம் ரூ.40,676 கோடி நிகர லாபம் ஈட்டியது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் நிகர லாபமான ரூ.36,397 கோடியைவிட இது அதிகம்.
மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த பிரீமியம் வருவாய் ரூ.4,74,005 கோடியிலிருந்து ரூ.4,75,070 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...