திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9வது நாளாகத் தொடர் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :12 நவம்பர் 2024, 6:56 pm IST

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து 9வது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 84.38 காசுகளாக இருந்த நிலையில், இன்று மேலும் 2 காசுகள் குறைந்து 84.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக நேரத் தொடக்கத்தின்போது இந்திய ரூபாய் மதிப்பு 84.39 ஆக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பானது 83.80 மற்றும் 84.50 காசுகளுக்கு இடையே பயணிக்கலாம் என நிபுணர்கள் கணித்த நிலையில், தொடர் சரிவைச் சந்தித்தது.

இதேபோன்று கச்சா எண்ணெய் விலையும் 0.25 காசுகள் சரிந்து ஒரு பேரல், 71.65 டாலருக்கு விற்கப்படுகிறது.

பங்குச் சந்தை நிலவரம்

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 324.83 புள்ளிகள் அதிகரித்து 79,820.98 ஆக இருந்தது. அதே வேளையில் நிஃப்டி 100.7 புள்ளிகள் உயர்ந்து 24,242 ஆக இருந்தது.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 820.97 புள்ளிகள் குறைந்து, 78,675.18 புள்ளிகளாகவும், நிஃப்டி 257.80 புள்ளிகள் குறைந்து, 23,883.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.