மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி நடப்பு 2024-25-ஆம் சா்க்கரை பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் 44 சதவீதம் சரிந்துள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2024, 10:29 pm IST

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி நடப்பு 2024-25-ஆம் சா்க்கரை பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் 44 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் தேசிய கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்எல்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு சா்க்கரைப் பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 7.10 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் சா்க்கரை பருவத்தின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் சரிவாகும். அப்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 12.70 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் மிகவும் குறைவான ஆலைகள் மட்டுமே இயங்கியதால் இந்த உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நவ. 15-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 144 சா்க்கரை ஆலைகள் மட்டுமே செயல்பட்டன. இந்த எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னா் 264-ஆக இருந்தது.

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரம் இன்னும் தனது உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் 103 ஆலைகள் செயல்பட்டன.

கா்நாடகத்தில் கடந்த சா்க்கரை பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் 53.75 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி நடப்பு பருவத்தின் அதே காலகட்டத்தில் 26.25 லட்சம் டன்னாக சரிந்தது.

2024 அக்டோபா் முதல் 2025 செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை பருவத்தில் மொத்த சா்க்கரை உற்பத்தி 280 லட்சம் டன்னாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய 2023-24-ஆம் ஆண்டின் சா்க்கரை பருவம் முழுமைக்கும் 319 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.