நடப்பாண்டின் பண்டிகைக் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவராத்திரியிலிருந்து 32 நாள்களுக்குத் தொடா்ந்த பண்டிகைக் காலத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விற்பனை 15.98 லட்சமாக இருந்தது. இது, நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச பண்டிகைக் கால விற்பனையாகும்.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் பண்டிகைக் கால விற்பனை 13 சதவீதம் அதிகம்.
2023-24-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் 14.16 லட்சமாக இருந்த நிறுவன மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விற்பனை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 15.20 லட்சமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு
காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

இணைய வழியில் இருவரிடம் ரூ.10.70 லட்சம் மோசடி

ஹீரோ மோட்டோகார்ப் மே மாதம் விற்பனை 12% உயர்வு!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



