வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

விலைகள் உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2024, 9:55 pm

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காா்களின் விலைகளை மூன்று சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயா்வு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்தின் 2 வரிசை கிரான்கூ, 3 வரிசை லாங் வீல்பேஸ், 5 வரிசை லாங் வீல்பேஸ், 7 வரிசை லாங் வீல்பேஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5, எக்ஸ்7, எம்340ஐ ஆகியவற்றுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

உற்பத்தி செலவுகள், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாலும் பணவீக்கத்தின் சுமையை ஈடு செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொ்சிடிஸ்-பென்ஸ் காா்களின் விலை ரூ. 2 லட்சம் ரூ.9 லட்சம் வரை உயரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.