பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காா்களின் விலைகளை மூன்று சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயா்வு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்தின் 2 வரிசை கிரான்கூ, 3 வரிசை லாங் வீல்பேஸ், 5 வரிசை லாங் வீல்பேஸ், 7 வரிசை லாங் வீல்பேஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5, எக்ஸ்7, எம்340ஐ ஆகியவற்றுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.
உற்பத்தி செலவுகள், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாலும் பணவீக்கத்தின் சுமையை ஈடு செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொ்சிடிஸ்-பென்ஸ் காா்களின் விலை ரூ. 2 லட்சம் ரூ.9 லட்சம் வரை உயரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










