சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் அமைப்பு கோரிக்கை!

காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவிப்பு.

News image

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் - கோப்புப் படம்

Updated On :30 நவம்பர் 2024, 2:35 pm

DIN

கொல்கத்தா: காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக ஆயுள் நிறுவன காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய பொதுச் செயலாளர் வி.நரசிம்மன், கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அணுகுவோம் என்றார்.

புதிய தொழிலாளர் குறியீடுகளை திரும்பப் பெற வேண்டும், 2010 க்குப் பிறகு எல்.ஐ.சியில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இதில் அடங்கும்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு தற்போது 74% இருப்பதாகவும், அதை 100% உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.