தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இந்திய சந்தையில் தனது பங்கை விரிவுபடுத்தும் டேவூ!

இந்திய சந்தையில் தனது பங்கை விரிவுபடுத்த வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் தற்போது நுழைந்துள்ளது டேவூ.

டேவூ

Published On :

மும்பை: இந்திய சந்தையில் தனது பங்கை விரிவுபடுத்த வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் தற்போது நுழைந்துள்ளது டேவூ.

வளர்ந்து வரும் இந்திய சந்தையில் அதின் பங்கைக் கைப்பற்றும் நோக்கில் கொரிய பிராண்டான டேவூ இன்று இந்தியாவில் சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்கள் பிரிவில் நுழைவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உள்நாட்டு சந்தையில் நுழைந்த இந்நிறுவனம் எல்இடி டிவிகள், ஐஎஃப்பி எல்இடி டிவிகள், அல்கலைன் மற்றும் பேட்டரி இன்வெர்ட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் தடம்பதித்த டேவூ, மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ள நிலையில், உள்நாட்டு சந்தையில் தனது பயணத்தை தொடரும் வகையில் ஸ்மார்ட் சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்களுடன் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த போவதாக தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுடன் வெற்றியை பதிவு செய்த டேவூ விரைவில் தங்கள் தயாரிப்புகளான இண்டக்‌ஷன் பிளேட், மிக்சர் - கிரைண்டர்கள், பிளெண்டர்கள், டோஸ்டர்கள், சாண்ட்விச் இயந்திரம் உள்ளிட்டவையை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் உத்தரவாதங்களுடன் வரும் உயர்தர தயாரிப்புகளை நோக்கி நுகர்வோர் படிப்படியாக மாறியுள்ளனர் என்றார் டேவூ இந்தியாவின் நிர்வாக இயக்குநரான எச் எஸ் பாட்டியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.