எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

முதல் முறையாக 84 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்; உச்சத்தில் நிஃப்டி!

சென்செக்ஸ் 1,359.51 புள்ளிகள் உயர்ந்து 84,544.31 ஆகவும், நிஃப்டி குறியீடு 375.15 புள்ளிகள் உயர்ந்து 25,790.95 ஆக முடிவடைந்தது.

News image

சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை

Updated On :20 செப்டம்பர் 2024, 5:48 pm IST

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா ஒரு சதவிகிதம் உயர்ந்து இன்றைய காலை நேர வர்த்தகத்தில் புதிய சாதனை படைத்தது.

சென்செக்ஸ் அதன் முந்தைய நாள் முடிவான 83,184.80 இருந்து இன்றைய காலை நேர வர்த்தக துவக்கத்தில் 83,603.04 ஆக துவங்கி சிறித நேரத்தில் ஒரு சதவிகிதம் உயர்ந்தது, அதன் உச்சமான 84,694.46 தொட்டது. நிஃப்டி டாப் 50 அதன் முந்தைய நாள் முடிவான 25,415.80 இருந்து வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதன் புதிய உச்சமான 25,849.25 ஐ அடைந்தது. அதே வேளையில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் தலா ஒரு சதவிகிதம் உயர்ந்தன.

இறுதியாக சென்செக்ஸ் 1,359.51 புள்ளிகள் உயர்ந்து 84,544.31 ஆகவும், நிஃப்டி 375.15 புள்ளிகள் உயர்ந்து 25,790.95 ஆக முடிவடைந்தது.

ஆசாஹி இந்தியா கிளாஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி, சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், ஷியாம் மெட்டாலிக்ஸ், ஹோம் பர்ஸ்ட், ஹெச்.எஃப்.சி.எல், மேன்கைண்ட் பார்மா, சோமேட்டோ, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், பிபி ஃபின்டெக், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஹோல்டிங்ஸ், குவெஸ் கார்ப், ஹேவல்ஸ் இந்தியா உள்ளிட்ட 260 பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை தொட்டது.

பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமானது சுமார் ரூ.466 லட்சம் கோடியிலிருந்து கிட்டத்தட்ட ரூ.472 லட்சம் கோடியாக உயர்ந்ததால் முதலீட்டாளர்களை இன்றைய அமர்வு வளப்படுத்தியது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மாருதி, டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், நெஸ்லே, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 0.27 சதவிகிதமும், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் வங்கி, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்த நிலையில் ஷாங்காய் சற்று சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) குறிப்பிடத்தக்க உயர்வுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ .2,547.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.29 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 74.66 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.