நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எத்தனால், சர்க்கரை விலையை உயர்த்த பரிசீலனை: பிரகலாத் ஜோஷி

2024-25 பருவத்திற்கான எத்தனால் விலையையும், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையையும் அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சா் பிரகலாத் ஜோஷி

Updated On :26 செப்டம்பர் 2024, 7:26 pm IST

2024-25 பருவத்திற்கான எத்தனால் விலையையும், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையையும் அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உணவு துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

எத்தனால் விலையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ள நிலையில், இது குறித்து பெட்ரோலிய அமைச்சகமும் விவாதித்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2019ல் பிப்ரவரியில் நிர்ணயம் செய்யபட்ட சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிலோவுக்கு ரூ.31-ஆக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பருவமழை காரணமாக 2024-25 (அக்டோபர் முதல் செப்டம்பர்) வரையான பருவத்தில் சர்க்கரை உற்பத்தி நன்றாக உள்ள நிலையில் 2022-23 (நவம்பர் முதல் அக்டோபர்) முதல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட எத்தனாலின் விலை, பிறகு உயர்த்தப்படவில்லை.

தற்போது, கரும்பு சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் லிட்டருக்கு ரூ.65.61 ஆகவும், பி-ஹெவி மற்றும் சி-ஹெவி மொலாசஸிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கான விலை முறையே லிட்டருக்கு ரூ.60.73 மற்றும் ரூ.56.28-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.