ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

News image
ரிசர்வ் வங்கி
Updated On :4 ஏப்ரல் 2025, 12:05 pm

DIN

மும்பை: மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

இந்த தாள்களின் வடிவமைப்பு மகாத்மா காந்தி வரிசையில் தற்போது உள்ள ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை போலவே உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள தாள்களும் வழக்கம்போல் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம், ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள தாள்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.

நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்த பிறகு, பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்கு பதிலாக மல்ஹோத்ரா 2024 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.