பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடியை எட்டும்: மேத்தா

பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அமுல் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image

அமுல் பால் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2025, 9:49 pm IST

புதுதில்லி: பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், 'அமுல்' என்ற பிராண்டின் கீழ் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா மேலும் தெரிவித்ததாவது:

அமுல் பிராண்டின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை எட்டும். இந்த நிதியாண்டில் 14 சதவிகித வளர்ச்சி உடன் ரூ.75,000 கோடி இலக்காகக் கொண்டுள்ளோம்.

18 உறுப்பு தொழிற்சங்கங்கள் அமுல் தயாரிப்புகளை நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் அவர்களின் வருவாய் ரூ.25,000 கோடியாக இருக்கும் அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்றார்.

2024-25 நிதியாண்டில், அதன் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்து ரூ.65,911 கோடியாகவும், 2023-24ல் அதன் விற்பனை சுமார் ரூ.59,250 கோடியாக இருந்தது.

குஜராத்தின் 18,600 கிராமங்களில் 36 லட்சம் விவசாயிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய விவசாயிகளுக்கு சொந்தமான பால் கூட்டுறவு நிறுவனமான ஜி.சி.எம்.எம்.எஃப். என்ற நிலையில், அதன் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 350 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜி.சி.எம்.எம்.எஃப். இந்தியா முழுவதும் ஒரு லிட்டர் பேக்குகளின் விலையை ரூ.1 குறைத்தது. அதே வேளையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஜி.சி.எம்.எம்.எஃப் தொடர்ந்து அதன் திறனை விரிவுபடுத்தும் என்றது.

உள்நாட்டு சந்தையைத் தவிர, ஜி.சி.எம்.எம்.எஃப். சுமார் 50 நாடுகளுக்கு தனது பால் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.