ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடியை எட்டும்: மேத்தா

பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அமுல் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
அமுல் பால் - கோப்புப் படம்
Updated On :6 ஏப்ரல் 2025, 4:19 pm

DIN

புதுதில்லி: பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், 'அமுல்' என்ற பிராண்டின் கீழ் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா மேலும் தெரிவித்ததாவது:

அமுல் பிராண்டின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை எட்டும். இந்த நிதியாண்டில் 14 சதவிகித வளர்ச்சி உடன் ரூ.75,000 கோடி இலக்காகக் கொண்டுள்ளோம்.

18 உறுப்பு தொழிற்சங்கங்கள் அமுல் தயாரிப்புகளை நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் அவர்களின் வருவாய் ரூ.25,000 கோடியாக இருக்கும் அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்றார்.

2024-25 நிதியாண்டில், அதன் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்து ரூ.65,911 கோடியாகவும், 2023-24ல் அதன் விற்பனை சுமார் ரூ.59,250 கோடியாக இருந்தது.

குஜராத்தின் 18,600 கிராமங்களில் 36 லட்சம் விவசாயிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய விவசாயிகளுக்கு சொந்தமான பால் கூட்டுறவு நிறுவனமான ஜி.சி.எம்.எம்.எஃப். என்ற நிலையில், அதன் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 350 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜி.சி.எம்.எம்.எஃப். இந்தியா முழுவதும் ஒரு லிட்டர் பேக்குகளின் விலையை ரூ.1 குறைத்தது. அதே வேளையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஜி.சி.எம்.எம்.எஃப் தொடர்ந்து அதன் திறனை விரிவுபடுத்தும் என்றது.

உள்நாட்டு சந்தையைத் தவிர, ஜி.சி.எம்.எம்.எஃப். சுமார் 50 நாடுகளுக்கு தனது பால் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.