ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்: ஒரே மாதத்தில் 11.3 லட்சம் பேர் இணைந்தனர்!

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்!

News image
Updated On :14 ஏப்ரல் 2025, 1:11 pm

DIN

மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களாக பதிவாகியுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 21.9 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்திருந்த நிலையில், அதற்கடுத்த ஐந்தே மாதங்களில், அதாவது ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களாக பதிவாகியுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 21.9 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்திருந்த நிலையில், அதற்கடுத்த ஐந்தே மாதங்களில், அதாவது ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.