கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்: ஒரே மாதத்தில் 11.3 லட்சம் பேர் இணைந்தனர்!

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்!

News image
Updated On :14 ஏப்ரல் 2025, 1:11 pm

DIN

மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களாக பதிவாகியுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 21.9 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்திருந்த நிலையில், அதற்கடுத்த ஐந்தே மாதங்களில், அதாவது ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களாக பதிவாகியுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 21.9 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்திருந்த நிலையில், அதற்கடுத்த ஐந்தே மாதங்களில், அதாவது ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.