திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!

எம்.டி.என்.எல். நிறுவனமானது ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 11:01 pm IST

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல். ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மொத்த கடன் மார்ச் 31, 2025 நிலவரப்படி ரூ.33,568 கோடியை எட்டியுள்ளதாக தனது ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா இடமிருந்து ரூ.3,633.42 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் இந்தியாவிலிருந்து ரூ.2,374.49 கோடியும், பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து ரூ.1,077.34 கோடியும், பஞ்சாப் நேஷனல் இந்தியாவிலிருந்து ரூ.464.26 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் ரூ.350.05 கோடியும், யூகோ வங்கியில் ரூ.266.30 கோடியும், அசல் மற்றும் வட்டியுடன் ரூ.180.3 கோடியும் கடன் பாக்கி வைத்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.33,568 கோடியாக உள்ளது. இதில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியது ரூ.8,346 கோடியும், மாநில அரசு பத்திரங்களில் ரூ.24,071 கோடியும் மற்றும் தொலைத் தொடர்புத் துறையிடமிருந்து பெற்ற ரூ.1,151 கோடி கடன் ஆகியவை இதில் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.