

புதுதில்லி: டிஐஏ (டைமண்ட் இம்பிரெஸ்ட் அங்கீகாரம்) திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த வரி மற்றும் இழப்பீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
ஏற்றுமதியை அதிகரிக்கவும் அதே வேளையில் மதிப்பு கூட்டலை அதிகரிக்கவும், குறிப்பிட்ட வரம்பு வரை வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்களை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கும் இந்தத் திட்டத்தை அரசு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
டிஐஏ-இன் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த வரி மற்றும் இழப்பீட்டு வரி செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.