முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ஐபிஓ-க்களில் புதிய உச்சம் தொட்ட இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டில் தொடக்க பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலம் ரூ.1.95 லட்சம் கோடி திரட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 3:34 am IST

இந்திய நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டில் தொடக்க பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலம் ரூ.1.95 லட்சம் கோடி திரட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

இது குறித்து மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஷியல் சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2025-ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் 365-க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் மூலம் ரூ.1.95 லட்சம் கோடி திரட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் சாதனையை முறியடித்துள்ளது.

அந்த ஆண்டில் மிகப் பெரிய நிறுவனங்களின் ஐபிஓ-க்கள் மொத்த மூலதன திரட்டலில் 94 சதவீதம் பங்களித்துள்ளன. 106 பெரிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் ரூ.1.83 லட்சம் கோடி திரட்டின. எஞ்சிய 259 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஐபிஓக்-கள் இதில் சிறிய பங்கு வகித்தன.

நடப்பு 2025-ஆம் ஆண்டில் டாடா கேப்பிட்டல் நிறுவனம் அக்டோபரில் ஐபிஓ மூலம் ரூ.15,512 கோடி திரட்டியது. இது இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் நான்காவது பெரிய ஐபிஓ ஆகும்.

டாடா கேப்பிட்டலுக்கு அடுத்தபடியாக ஹெச்டிபி ஃபைனான்ஷியல் சா்வீசஸ் ஐபிஓ மூலம் ரூ.12,500 கோடி திரட்டியது. அதே போல் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.11,607 கோடியும் க்ரோவ் ரூ.6,632 கோடியும் திரட்டின. இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோ ஐபிஓ மூலம் ரூ.5,421 கோடியைத் திரட்டியது.

துறை ரீதியில், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) ஐபிஓ மூலம் மூலதனம் திரட்டியதில் 26.6 சதவீத பங்குடன் முதலிடம் வகித்தன. அதைத் தொடா்ந்து மூலதனப் பொருள்கள், தொழில்நுட்பம், சுகாதாரம், நீடித்துழைக்கும் நுகா்பொருள் துறை நிறுவனங்கள் உள்ளன.

முந்தைய 2024-ஆம் ஆண்டு ஐபிஓ மூலம் மூலதனம் திரட்டியதில் வாகனம், தகவல் தொடா்பு, சில்லறை விற்பனை ஆகிய துறைகளைச் சோ்ந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின.

நடப்பு 2025-ஆம் ஆண்டில் ஐபிஓக்கள் சராசரியாக 26.6 மடங்கு மிகை சந்தா பெற்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.