கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடும் சரிவில் பங்குச்சந்தை! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.

News image

கோப்புப்படம்

Updated On :3 பிப்ரவரி 2025, 6:23 am

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,063.94 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.43 மணியளவில் சென்செக்ஸ் 594.88 புள்ளிகள் குறைந்து 76,911.08 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 212.95 புள்ளிகள் குறைந்து 23,269.20 புள்ளிகளில் முடிந்தது.

இன்று பங்குச்சந்தை சரிவினால் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஃப்டியில் பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

அதே நேரத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், எல்&டி, பிபிசிஎல், என்டிபிசி, கோல் இந்தியா ஆகியவை நஷ்டமடைந்த நிறுவனங்களாகும்.

நுகர்வோர் சாதனங்கள் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் சரிவில் உள்ளன.

பிஎஸ்இ மிட்கேப் 1 சதவீதமும், ஸ்மால்கேப் கிட்டத்தட்ட 2 சதவீதமும் சரிந்தன.

ரூபாயின் மதிப்பு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகச் சரிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.