விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.50 ஆக முடிவு!

இன்றை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு எந்தவித மாற்றமின்றி ரூ.87.50 ஆக முடிந்தது.

News image

PTI Graphics

Updated On :10 பிப்ரவரி 2025, 6:12 pm IST

மும்பை: இன்றை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு எந்தவித மாற்றமின்றி ரூ.87.50 ஆக முடிந்தது. இருப்பினும் இந்திய ரூபாய் 88.00-ஐ நெருங்கியதால் வர்த்தகளிடையே டாலர் வாங்கும் ஆர்வம் வெகுவாக வெளிப்பட்டது.

அமெரிக்க அதிபரின் கட்டண உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, இந்திய ரூபாய் மீது அழுத்தம் மேலும் எடைபோட்டது. பிறகு ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இந்திய ரூபாய் 87.50- ஆக நிலைபெற்றது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது 25 சதவிகித கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கும் நாடுகளை குறிவைத்து பரஸ்பர கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.94 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.95 ஆகவும் சரிந்து, முடிவில் எந்தவித மாற்றமின்றி தட்டையாக ரூ.87.50ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.