பெரம்பலூர், கரூரில் காலணி தொழிற்சாலை அமைக்கும் எவர்வன் குழுமம்!
பீனிக்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வன் கோத்தாரி தமிழகத்தில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது


சென்னை: பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வன் கோத்தாரி காலணி லிமிடெட் தமிழகத்தில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் செயல் தலைவர் ரபீக் அகமது தலைமையிலான எவர்வன் கோத்தாரி ஆகியோர் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தாரீஸ் அகமதுவுடன் ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யவும் தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிகத் துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் காலணி தயாரிக்கும் திட்டத்தை நிறுவும் திட்டத்துடன், பின்தங்கிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்த முயற்சி தனிநபர் வருமான அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இப்பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.
இதையும் படிக்க: ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...