இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

பிஎன்பி கடனளிப்பு 15% உயா்வு

News image
Updated On :3 ஜனவரி 2025, 4:43 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கடனளிப்பு கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் 15 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் வங்கியின் கடனளிப்பு ரூ.11.11 லட்சம் கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.9.67 லட்சம் கோடியாக இருந்தது.

2023 டிசம்பா் மாத இறுதியில் ரூ.13.23 லட்சம் கோடியாக இருந்த வாடிக்கையாளா்களின் மொத்த வைப்பு நிதி முதலீடு, நடப்பு நிதியாண்டின் அதே தேதியில் 15.6 சதவீதம் அதிகரித்து ரூ.15.30 லட்சம் கோடியாக உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.22.90 லட்சம் கோடியிலிருந்து 15.3 சதவீதம் உயா்ந்து ரூ.26.42 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.