Ola Electric
Ola Electric

விதிமுறைகளை மீறியதாக ஓலா எலெக்ட்ரிக் மீது செபி நோட்டீஸ்!

மின்சார வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் விதிமுறைகளை மீறியதற்காக சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் இருந்து நிர்வாக எச்சரிக்கையைப் பெற்றுள்ளது.
Published on

புதுதில்லி: மின்சார வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், விதிமுறைகளை மீறியதற்காக சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் இருந்து நிர்வாக எச்சரிக்கையைப் பெற்றுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனர், பவிஷ் அகர்வால் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். அதில் டிசம்பர் 20 க்குள் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்கும் தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டார். பிறகு டிசம்பர் 2-ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் செபியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓலா எலக்ட்ரிக் தனது இ-ஸ்கூட்டர் விரிவாக்க திட்டங்களை முதலில் செபியிடம் தெவிப்பதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் அறிவித்ததன் மூலம், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சமமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்க நீங்கள் தவறிவிட்டீர்கள். இதற்காக ஜனவரி 7 ஆம் தேதி மின்னஞ்சல் வழியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையும் படிக்க: கரடியின் ஆதிக்கத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!

செபி தனது எச்சரிக்கை கடிதத்தில், மேற்கண்ட விதிமீறல்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க எதிர்காலத்தில் கவனமாக இருக்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் அமலாக்க நடவடிக்கை தொடங்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இதனிடைய இன்று (புதன்கிழமை) ஓலா எலக்ட்ரி நிறுவனத்தின் பங்குகள் 4.78 சதவிகிதம் சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.75.38 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com