கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகம்!

கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி இன்று தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்படும் என்று மருந்துகள் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் நிறுவப்படும் இந்த ஆய்வகம், மருத்துவ சாதனங்கள் மற்றும் தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், பல ஆய்வாளர்களுக்கு வேலைவாய்ப்பினை நிறுவனம் உருவாக்கும் என்றார் மருந்துகள் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் எம்.என். ஸ்ரீதர்.

அதே வேளையில், ஆய்வாளர்களின் திறன்களை மேம்படுத்த பயிற்சி திட்டங்களையும் அரசு நடத்தும் என்றார்.

ஐரோப்பிய நிறுவனமான ஐஎம்க்யூ குழுமம் மின்னணுவியல் மற்றும் தயாரிப்பு இணக்கத்திற்கான சோதனை மற்றும் ஆய்வு சேவைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள நிலையில், ஐஎம்க்யூ குழுமம், உள்நாட்டு சந்தையில் நுழைவதைக் குறிக்கும் நிகழ்வில் எம்.என்.ஸ்ரீதர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.க்யூ குழுமம், அதன் கூட்டு நிறுவனமான எலெட்ரா டெக் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்கும் என்றார் ஐ.எம்.க்யூ குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வின்சென்சோ டி மார்டினோ.

மருத்துவ சாதனத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் வேளையில் மேம்பட்ட சோதனை தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.எம்.க்யூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெபனோ ஃபெரெட்டி மற்றும் சிஓஓ கிரண் ராஜு நாராயண் ஆகியோரால் வழிநடத்தப்படும்.

இதையும் படிக்க: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 624 பில்லியன் டாலராக சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com