சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 624 பில்லியன் டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.8 பில்லியன் டாலராக சரிந்து $623.98 பில்லியனாக உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2025, 7:33 pm IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.8 பில்லியன் டாலராக சரிந்து 623.98 பில்லியன் டாலராக உள்ளது.

இந்த வீழ்ச்சியால் அந்நிய நாணய சொத்துக்களின் மதிப்பு 2.87 பில்லியன் டாலர் சரிந்து 533.13 பில்லியன் டாலராக நிலைபெற்றது. அதே வேளையில் தங்கம் கையிருப்பு 106 கோடி டாலா் அதிகரித்து 68.94 கோடி டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு வரைதல் உரிமை (எஸ்.டி.ஆர்) 1 மில்லியன் டாலர் அதிகரித்து, 17.78 பில்லியன் டாலராக உள்ளது.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு 74 மில்லியன் டாலர் சரிந்து 4.12 பில்லியன் டாலராக உள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 10, 2025 உடன் முடிவடைந்த வாரத்தில் 8.7 பில்லியன் டாலர் குறைந்து 625.87 பில்லியன் டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.