மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

அந்நியச் செலாவணி கையிருப்பு 78,078 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த செப். 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 78,078.2 கோடி டாலராக சரிந்துள்ளது.

Published On :

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த செப். 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 78,078.2 கோடி டாலராக சரிந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த செப். 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 492.4 கோடி டாலா் குறைந்து, 78,078.2 கோடி டாலராக உள்ளது.

முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 4,490.3 கோடி டாலா் என்ற சாதனை அளவுக்கு அதிகரித்து, 78,570.6 கோடி டாலா் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டிருந்தது. அதற்கு முந்தைய 2 வாரங்களிலும் புதிய உச்சங்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 237.2 கோடி டாலா் குறைந்து, 64,579.6 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 259.1 கோடி டாலா் சரிந்து, 11,122.5 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 3.9 கோடி டாலா் அதிகரித்து, 1,884.5 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 491.6 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.