அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாபம் 25% அதிகரிப்பு!

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இன்று 3வது காலாண்டிற்கான முடிவுகளை அறிவித்தது.

News image
Updated On :27 ஜனவரி 2025, 11:08 pm IST

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இன்று 3வது காலாண்டிற்கான முடிவுகளை அறிவித்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.548.02 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.436.97 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 25 சதவிகிதம் அதிகமாகும்.

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வருவாயும் 26 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,448.86 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,946.18 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 25 சதவிகிதம் அதிகரித்து ரூ.806 கோடியாக இருந்தது.

வருடாந்திர அடிப்படையில், 31 டிசம்பர் 2024 நிலவரப்படி மொத்த செயல்படாத சொத்து மற்றும் நிகர செயல்படாத சொத்து, 31 டிசம்பர் 2023 நிலவரப்படி 0.25% மற்றும் 0.10% க்கு முறையே 0.29% மற்றும் 0.13% ஆக இருந்தது.

நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வர்த்தகம் முடிந்த பிறகு வெளியிடப்பட்டது. இதனிடையில், இன்றைய வர்த்தக நேர முடிவில் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் 3 சதவிகிதம் சரிந்து ரூ.105.40 ஆக முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.