மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இன்றைய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது...

News image

பங்குச் சந்தை

Updated On :27 ஜனவரி 2025, 5:41 am

பங்குச் சந்தை கடந்த வாரம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் வணிக நாளான இன்றும் சரிவுடனே தொடங்கியுள்ளது.

இன்று காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 680 புள்ளிகள் சரிந்து 75,510.85 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகின்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 22,858.30 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 76,190.46 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ், மேலும் 490 புள்ளிகள் சரிந்து 75,700.43 புள்ளிகளாக இன்று வணிகம் தொடங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை 23,092.20 புள்ளிகளில் முடிந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று சற்றே புள்ளிகள் உயர்ந்து 23,183.903 புள்ளிகளுடன் தொடங்கியது.

இன்றைய வணிகத்தில் பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல ஹீரோ மோட்டார், மாருதி, ஆசியன் பெயிண்ட், ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா, இன்போசிஸ் போன்ற பங்குகளின் விலை சரிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.